புகைரதத்துடன் மோதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்..! புகைரத கடவையை கடக்க முயன்றபோது சம்பவம்..

ஆசிரியர் - Editor I
புகைரதத்துடன் மோதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்..! புகைரத கடவையை கடக்க முயன்றபோது சம்பவம்..

புகைரதம் வந்துகொண்டிருந்தபோது கடவையை கடக்க முயற்சித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம் ஹட்டன் - றொசெல்ல புகைரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களுடைய குழந்தை என 3 பேரும் பலியானதாக கூறப்படுகின்றது. 

புகைரதம் வந்து கொண்டிருந்த நிலையில் பொறுப்பற்று புகைரத கடவையை கடக்க முயற்சித்தமையினாலேயே விபத்து இடம்பெற்றதாக

அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தொிக்கின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு