இரண்டு காணிகளுக்குள் இரகசியமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்புக்கள்!

ஆசிரியர் - Admin
இரண்டு காணிகளுக்குள் இரகசியமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்புக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவில் கசிப்பு வியாபாரம் அதிகரித்துள்ளதோடு குடும்ப வன்முறைகளாலும் பலர் பாதிக்கப்படுவதாகவும் கசிப்பு விற்பனை மேற்கொண்டுவரும் நபர்கள் சிலர் தொடர்பிலும் மக்கள் கிராம அலுவலரிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களின் முறைப்பாட்டுக்கமைய காவற்துறையினரின் உதவியுடன் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த இடத்துக்கு சென்று இரண்டு காணிகளுக்குள் இரகசியமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கான் கசிப்புக்கள். இரண்டு வீட்டு உரிமையாளர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு