மர்ம பொருள் ஒன்றை வெட்ட முயற்சித்தபோது இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 25 வயது இளைஞன் உடல் சிதறி பலி, 13 வயது சிறுவன் ஆபத்தான நிலையில்! பரந்தனில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மர்ம பொருள் ஒன்றை வெட்ட முயற்சித்தபோது இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 25 வயது இளைஞன் உடல் சிதறி பலி, 13 வயது சிறுவன் ஆபத்தான நிலையில்! பரந்தனில் சம்பவம்..

அடையாளம் காணப்படாத பொருள் ஒன்றை கையாள நினைத்தபோது அது வெடித்துச் சிதறியதில் 25 வயதான இளைஞன் உடல் சிதறி பலியானதுடன், 13 வயதான சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05-12-2021 ) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

மர்மப் பொருள் ஒன்றை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது குறித்த பொருள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளதுடன் சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்துள்ளான். 

சம்பவத்தின்  சிவலிங்கம் யுவராஜ் (வயது- 25) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், சிவலிங்கம் நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள வீட்டின் சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை 

இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு