மூர்க்கத்தனமான அடிதடியில் முடிந்த காணி தகராறு..! ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மூர்க்கத்தனமான அடிதடியில் முடிந்த காணி தகராறு..! ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்..

காணி தகராறு அடிதடியில் முடிந்த நிலையில் 3 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.    

குறித்த சம்பவம் வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூமாங்குளம், முருகையா குளத்துக்குச் செல்லும் வீதியில் குடும்பம் ஒன்று வசித்து வரும் காணிக்குள் நுழைந்து அடாத்தாக கொட்டகை ஒன்றை போடுவதற்குச் சிலர் முயன்றனர். 

இதனை குறித்த காணியில் வசித்து வந்தோர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், தடுக்கச் சென்றவர்கள் மீது அங்கு வந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த தாக்குதலில் தாய், பிள்ளைகள் என மூன்று பெண்கள் உட்பட 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த காணி தொடர்பில் கடந்த சில மாதங்களாக ஒருவர் பிணக்கில் ஈடுபட்டார் எனவும், அவருக்கு ஆதரவாக வருகை தந்த சிலர் அத்துமீறி கொட்டகை அமைக்க முயன்றதுடன், 

தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு