ஆட்டோவும் - பேருந்தும் மோதி கோர விபத்து..! 3 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
ஆட்டோவும் - பேருந்தும் மோதி கோர விபத்து..! 3 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..

மட்டக்களப்பு - சந்திவெளி சித்தாண்டியில் பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று (18.11.2021) மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பஸ்ஸுடன் சந்தி வெளியிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே மோதி விபத்துக்குள்ளானது.

முச்சகர வண்டியின் டயர் வெடித்ததன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருக்கு தெரியவற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு