யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பம்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

அதன்படி வடக்கு ரயில் பாதையில் இன்றும் நாளையும் ஆறு நீண்ட தூர ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு கடுகதி ரயில் பயணங்களும், கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு யாழ்தேவி ரயில் பயணங்களும், 

கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு நகர்சேர் கடுகதி ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு