நான் 3 வீடுகளில் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் விலகத் தயார்

ஆசிரியர் - Admin
நான் 3 வீடுகளில் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் விலகத் தயார்

நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்தார். 

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் நாடாளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகுவதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்த கருத்துக்குத் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டின் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர், அவருக்கு அமைச்சர் ஒருவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தாம், இன்று வசிப்பது அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல வசித்த வீடாகும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு