நவீன வசதிகளுடன் விளையாட்டுத் திடல்! – யாழ். இந்துவில் நாளை திறப்பு!

ஆசிரியர் - Admin
நவீன வசதிகளுடன் விளையாட்டுத் திடல்! – யாழ். இந்துவில் நாளை திறப்பு!

அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடல் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளையின் ஒத்துழைப்புடன் இந்த விளையாட்டுத் திடல் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 55 மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டுத் திடல் சீரமைக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் ஸ்கோர் போர்ட், விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வறைகள், பயிற்சிக்கான இடம், நவீன மைதானப் பராமரிப்பு என்பன போன்ற வசதிகளுடன் இந்த விளையாட்டுத் திடல் ஒருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களில் அதி நவீன வசதிகள் கொண்ட விளையாட்டுத் திடலாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடல் மாற்றம் பெற்றிருக்கின்றது.

நாளை திறந்து வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கும், கொழும்பு றோயல் கல்லூரி 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கும் இடையே 30 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட கிரிக்கெட் ஆட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு