மண்மேடு சரிந்து விழுந்ததில் தாயும் இரு பெண் பிள்ளைகளும் பலி..! தந்தை ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
மண்மேடு சரிந்து விழுந்ததில் தாயும் இரு பெண் பிள்ளைகளும் பலி..! தந்தை ஆபத்தான நிலையில்..

கனமழையினால் மண்மேடு சரிந்து விழுந்ததில் தாயும் இரு பெண் பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

கேகாலை, ரம்புக்கணை – தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கியே குறித்த 3 பேரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த தாயும், 8 வயது மற்றும் 14 வயதுடைய இரு மகள்களும் உயிரிழந்துள்ளனர்.

தந்தை பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக 

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு