ஆயுள்வேத சிகிச்சை நிலையத்தின் பெயரில் விபச்சார நிலையம்! பொலிஸ் முற்றுகையில் 3 பெண்கள் கைது..

ஆசிரியர் - Editor I
ஆயுள்வேத சிகிச்சை நிலையத்தின் பெயரில் விபச்சார நிலையம்! பொலிஸ் முற்றுகையில் 3 பெண்கள் கைது..

ஆயுள்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்ஹவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் 

மற்றும் கல்குடா பொலிஸார் இணைந்து நேற்று மாலை ஆயுர்வேத மசாஜ் நிலையத்தினை முற்றுகையிட்டபோது 

அங்கிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அவிசாவளை மற்றும் பொலனறுவை பகுதியினைச் சேர்ந்த 21, 33, 38 வயதுடைய பெண்களாகும்.  

சந்தேகநபர்கள் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 

எதிர்வரும் 19ம் திகதி வரை சமூகநோய் தொடர்பான அறிக்கை பெறுவதற்காக தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக 

கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு