அயல் வீட்டாருடன் கைகலப்பு..! சமாதானப்படுத்த சென்றிருந்த 3 பிள்ளைகளின் தாய் அடித்துக் கொலை..

ஆசிரியர் - Editor I
அயல் வீட்டாருடன் கைகலப்பு..! சமாதானப்படுத்த சென்றிருந்த 3 பிள்ளைகளின் தாய் அடித்துக் கொலை..

அயல் வீட்டாருடன் இடம்பெற்ற கைகலப்பை நிறுத்த சென்றிருந்த 3 பிள்ளைகளின் தாய் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார். சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

நேற்று இரவு வட்டவளை - மவுன்ஜீன் தோட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, அயல் குடும்பத்திற்கும், தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட கைகலப்பை 

சமாதானப்படுத்த சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த 

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஹட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு