வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு நாளை விவசாயிகள் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு நாளை விவசாயிகள் போராட்டம்..!

வடமாகாண ஆளுநர் செலயகத்தை முற்றுகையிட்டு நாளை காலை விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் எஸ்.பிரபாகரன் கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் அரசினால் உர இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதோடு கால்நடைகளுக்கான தீவனம் பெறுவதில் இடர்பாடு 

காணப்படுவதனால் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர்,பண்ணையாளர்கள் பெரும் இடரினை எதிர்நோக்கி வருகின்றார்கள் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நீதிகோரி 

எதிர்வரும் நாளை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கண்டன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு வலி வடக்கு பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட 

வீட்டுத்திட்டத்தில் முதல் கட்ட நிதி மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது மேலதிகமான நிதி வசதிகள் இன்றுவரை மக்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே ஆனால் பாதிக்கப்பட்ட அனைவரும் 

ஒன்றிணைந்து அவனுக்கு மாகாண ஆளுநர் செயல்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதோடு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்குச் 

சென்று மகஜரும் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு