அடுத்துவரும் 2 நாட்களுக்கு வடகிழக்கு மாகாணங்களில் மழை நீடிக்கும்! சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
அடுத்துவரும் 2 நாட்களுக்கு வடகிழக்கு மாகாணங்களில் மழை நீடிக்கும்! சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

வடகிழக்கு மாகாணங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.

தற்போதய காலநிலை மாற்றம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாகமுத்து பிரதீபராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

கடந்த 27 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது சிலாபத்திற்கு 67 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு குறித்த தாழமுக்கமானது தற்போது  சிலாபத்திற்கு மேற்காக நிலை கொண்டிருப்பதனால்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் தொடர்ச்சியாக 

இரண்டு நாட்களுக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு