யாழ்.ஊரெழு பகுதியில் பொலிஸார் முற்றுகை! சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு பகுதியில் பொலிஸார் முற்றுகை! சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் கைது..

யாழ்.ஊரெழு - பொக்கணைப் பகுதியில் கசிப்பு காய்ச்சிய நபரை கோப்பாய் பொலிசார் இன்று காலை கைது செய்திருக்கின்றனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு - பொக்கணைப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகை இடப்பட்டது. 

இதன்போது காசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் 20 லீற்ரருக்குக்கு மேற்பட்ட கசிப்பு  கைப்பற்றப்பட்டதுடன்  சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு