கிளிநொச்சியிலிருந்து மோட்டார் சைக்கிளை திருடிவந்து யாழ்.நெல்லியடியில் தங்கியிருந்து வழிப்பறி கொள்ளை..! ஒருவர் சிக்கினார், இருவர் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியிலிருந்து மோட்டார் சைக்கிளை திருடிவந்து யாழ்.நெல்லியடியில் தங்கியிருந்து வழிப்பறி கொள்ளை..! ஒருவர் சிக்கினார், இருவர் தப்பி ஓட்டம்..

கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடி அதே மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி யாழ்.நெல்லியடியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் தப்பி ஓடியுள்ளனர். 

தருமபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. அது பற்றி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 

வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். அவர்களின் அடையாளம் மற்றும் மோட்டார் சைக்கிள் விபரங்களை 

குறித்த பெண் பொலிஸாருக்கு வழங்கியுள்ளதுடன், முறைப்பாடு பதிவு செய்திருந்தார். பொலிஸார் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் நெல்லியடி பகுதியில் வீடொன்றில் இருந்து 

நேற்று காலை அதே மோட்டார் சைக்கிளுடன் வெளியே புறப்பட தயாராக இருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து வீட்டிலிருந்த ஏனைய இருவர் தப்பி ஓடியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் தருமபுரம் பகுதியை சேர்ந்தவர்.

அவர் பற்றிய தகவல்கள் தருமபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தொிவித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு