யாழ்.மீசாலையில் வீடு உடைத்து கொள்ளை..! CCTV கமராவின் சேமிப்பு தொகுதியையும் துாக்கி சென்ற கொள்ளை கும்பல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலையில் வீடு உடைத்து கொள்ளை..! CCTV கமராவின் சேமிப்பு தொகுதியையும் துாக்கி சென்ற கொள்ளை கும்பல்..

யாழ்.மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் சுமார் 9 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளதாக சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. 

மீசாலை வடக்கு - பூதவராயர் கோவிலை அண்மித்த பகுதியில் தனிமையில் வாழும் பெண் ஒருவர் பாதுகாப்பு கருதி உறவினர் ஒருவரின் வீட்டில் 

இரவில் உறங்குவதற்கு சென்றுள்ளார். குறித்த சம்பவத்தை அவதானித்த கொள்ளை கும்பல் அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர்

வீட்டை உடைத்து உட்புகுந்து சுமார் 9 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதுடன், 

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராவின் சேமிப்பு தொகுதியும் துாக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு