யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை! 4 வீடுகள் சேதம், 69 குடும்பங்கள் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை! 4 வீடுகள் சேதம், 69 குடும்பங்கள் பாதிப்பு..

யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 69 குடும்பங்களை செர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் கடந்த 3 நாளாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதுடன் குறித்த மழையுடன் கூடிய நிலையில் தாக்கத்தினால் 

ஊரகாவற்துறை, தெல்லிப்பளை, சங்கானை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச செயலர் ஊடாக பெறப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு