யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவைகள் ஆரம்பம்..! திகதி அறிவிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவைகள் ஆரம்பம்..! திகதி அறிவிக்கப்பட்டது..

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான புகைரத சேவைகள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகும். என யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் கூறியுள்ளார். 

கொரோனா தொற்று அபாயம் காரணமாக நாடுபூராகவும் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கல்கிசை - காங்கேசன்துறைக் கிடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 3ஆம் திகதி மாலை ஆரம்பமாகவுள்ளது. 

3ம் திகதி மாலை 5.30 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும் புகையிரதம் காங்கேசன்துறையை வந்தடைந்து மறுநாள் 4 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் 

காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு கொழும்புக்கு பயணிக்கவுள்ளது. எனினும் இன்று வரை முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் 

இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவே எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகும் புகையிரத சேவையானது வழமைபோல் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு சேவையுமாக 

சாதாரண புகையிரத சேவை மாத்திரமே முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு