வடமாகாணத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்ற தவிசாளர்களுக்கும் ஆளுநர் கண்டிப்பான உத்தரவு! சுற்றாடல் பொலிஸார் வர முன்னர் செய்யுங்கள்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்ற தவிசாளர்களுக்கும் ஆளுநர் கண்டிப்பான உத்தரவு! சுற்றாடல் பொலிஸார் வர முன்னர் செய்யுங்கள்..

வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் சகல தவிசாளர்களும் தமது ஆழுகைக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் 2 வாரங்களுக்குள் துாய்மைப்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கண்டிப்பான உத்தரவு வழங்கியிருக்கின்றார். 

அதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கழிவகற்றல் மற்றம் கால்வாயில் வெள்ளம் ஓடுவதற்கு தடையாக உள்ளவற்றை அகற்றுதல், காணிகள் வீடுகளை துப்பரவாக வைத்திருத்தல் உள்ளிட்ட துப்புரவு பணிகளை மேற்கொண்டு

தமது பகுதிகளை துாய்மையாக வைத்திருப்பது அவசியமாகும். சுற்றாடல் பொலிஸாரை அனுப்புவதற்கு முன்னர் தவிசாளர் தமது பகுதியை துாய்மையாக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவை ஆளுநர் பணித்துள்ளார். 

மழைகாலம் ஆரம்பித்துள்ளமையால் டெங்கு உள்ளிட்ட தொற்ற நொய்களின் ஆபத்திலிருந்து விலகி இருக்கும் வகையில் செயற்படவேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு