யாழ் வல்வெட்டித்துறையில் இராணுவம் அதிரடி..! வீடு முற்றுகை,12 பேர் கைது, வாள்கள், போதைப் பொருட்கள் மீட்பு...

ஆசிரியர் - Editor I
யாழ் வல்வெட்டித்துறையில் இராணுவம் அதிரடி..! வீடு முற்றுகை,12 பேர் கைது, வாள்கள், போதைப் பொருட்கள் மீட்பு...

யாழ் வல்வெட்டித்துறையில் விடுமுறை முற்றுகையிட்ட ராணுவம் 12 பேரை கைது செய்துள்ளதுடன் வீட்டிலிருந்து வாள்கள் மற்றும் பெருமளவு போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த முற்றுகை சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வல்வெட்டித்துறை  - நெடியகாடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான  நபர்கள் இருப்பதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து.

குறித்த வீட்டை சுற்றி வளைத்த இராணுவத்தினர் வீட்டுக்குள் நுழைந்தபோது 12 பேர் வீட்டில் இருந்துள்ளனர். மேலும் அங்கு வாள் மற்றும் கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதுடன் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு