மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியானது..!

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியானது..!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை நீக்கம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் இன்று பிற்பகல் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதன்படி நாளை மறுதினம் 31ம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுகிடையிலான பணத்தடை நிறைவுக்கு வருகின்றது. 

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை 

அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (29) முற்பகல் இடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின்போதே, 

ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு