ஒரு தமிழர் கூட இல்லாதது ஏன்? தனி நாடு உருவாக்கி பிரிந்து செல்ல சொகிறீர்களா? அதற்கும் நாம் தயார் என்கிறார் சிவாஜி..

ஆசிரியர் - Editor I
ஒரு தமிழர் கூட இல்லாதது ஏன்? தனி நாடு உருவாக்கி பிரிந்து செல்ல சொகிறீர்களா? அதற்கும் நாம் தயார் என்கிறார் சிவாஜி..

ஒரு நாடு ஒரு சட்டம் என கூறும் குழுவை உடனடியாக மீளப்பெறும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுக்கவேண்டும். என தமிழ்தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். 

வல்வெட்டித்துறையில் அவரது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையினுடைய ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 

ஒரு நாடு ஒரு சட்டமொன்றை அமல்படுத்துவதற்கான ஒரு குழுவை நியமித்து அதிலே வணக்கத்துக்குரிய ஞானசார தேரரை தலைவராகக் நியமித்திருக்கிறார்.ஞானசார தேரர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு காரணமாக தண்டிக்கப்பட்டு 

பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு வெளியில் வந்தவர். எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கியவர். அப்படிப்பட்ட ஒருவரை ஒரு நாடு ஒரு சட்டம் என்கிற செயலணிக்கு நியமித்துள்ளார். அதிலே பெயருக்குக் கூட ஒரு தமிழர் இல்லை.

அப்படி என்றால் இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தம் இல்லையா இந்த நாட்டிலே தமிழர்களுக்கு வாழ்வதற்கான உரிமை இல்லையா அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்று சொல்கிறீர்களா 

என்று ஜனாதிபதியை நாங்கள் கேட்கின்றோம். நாங்கள் இந்த செயலணி மூலம் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்று அறிவிக்க என்ன தடை இருக்கிறது. தனிநாட்டை உருவாக்கி செல்லுங்கள் என்றால் அதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றோம். 

ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் முறையை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும். இந்த குழுவைக் கலைக்க வேண்டும்.புதிய அரசியலமைப்பை உருவாக்க முன்னரே இவ்வாறான அவசரமான வேலைகளை 

ஏன் செய்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு