திடீர் உடல்நல குறைவினால் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்! கொரோனா தொற்றும் உறுதி..

ஆசிரியர் - Editor I
திடீர் உடல்நல குறைவினால் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்! கொரோனா தொற்றும் உறுதி..

உடல்நல குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

துன்னாலை தெற்கு, கரவெட்டியைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை(26) இரவு உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று புதன்கிழமை(27) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு