யாழ்.நாகவிகாரை விகாராதிபதி மாநகர முதல்வருக்கான எந்தவொரு மரியாதையும் கொடுக்கவில்லை..! மாநகர முதல்வர் மணிவண்ணன் காட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாகவிகாரை விகாராதிபதி மாநகர முதல்வருக்கான எந்தவொரு மரியாதையும் கொடுக்கவில்லை..! மாநகர முதல்வர் மணிவண்ணன் காட்டம்..

நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனோ அல்லது மதவாதியோ அல்ல. என யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் கூறியுள்ளார். 

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. அதன்போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறுகோரி 

மாநகர முதல்வருக்கு, அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் சபையில் முதல்வர் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு மதவாதி அல்ல , அத்தோடு பௌத்த மதத்துக்கு எதிரானவும்அல்ல. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன்.

அதனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல. என்னை மதவாதி என சித்திரிக்கும் வகையில் நாக விகாரை விகாராதிபதியினால் யாழ்.மாநகர முதல்வர் என 

எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே என்னைத் தவறான புரிதலுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். 

இதனை விகாராதிபதிக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அப்பகுதி புனித பிரதேசமாக இருக்க வேண்டும் நான் ஓர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் 

அந்த வகையில் நாம் எதிர்காலத்தில் அடையக்கூடிய தமிழ் தேசியத்தை ஒரு மதச் சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற 

அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு