குற்றவாளி தலைமையில் ஒரு ஜனாதிபதி செயலணி..! சிரிப்பு வருகிறது, சாணக்கியன் நகைப்பு..

ஆசிரியர் - Editor I
குற்றவாளி தலைமையில் ஒரு ஜனாதிபதி செயலணி..! சிரிப்பு வருகிறது, சாணக்கியன் நகைப்பு..

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ருவிட்டர் பக்கத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

இந்த குழு முரண்பாட்டிற்கான வரைவிலக்கணம் என தெரிவித்துள்ளார். சட்டத்தை முறையான விதத்தில் ஒழுங்குபடுத்த முடியாத நிலையில் குழுவொன்றை அமைப்பதன் நோக்கம் என்னவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குழுவிற்கு குற்றவாளியொருவரை நியமித்துள்ளமை வேடிக்கையான விடயம் எனவும் சாணக்கியன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு