வியாபார நிலையத்தை பூட்டிவிட்டு வீடு திரும்பிய வர்த்தகரை வழிமறித்த ரவுடிகள்! தப்பி ஓடியும் வீடு வரை துரத்திச் சென்று வாள்வெட்டு..

ஆசிரியர் - Editor I
வியாபார நிலையத்தை பூட்டிவிட்டு வீடு திரும்பிய வர்த்தகரை வழிமறித்த ரவுடிகள்! தப்பி ஓடியும் வீடு வரை துரத்திச் சென்று வாள்வெட்டு..

வியாபார நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் 

நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கனகபுரம் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தை பூட்டிவிட்டு

வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகரை அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையத்தின் முன்பாக ரவுடிகள் வழிமறித்துள்ளனர். 

அவர்களிடமிருந்து தப்பித்த வர்த்தகர் ஆனந்தநகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற நிலையில் பின் தொடர்ந்து சென்ற ரவுடிகள் அவர் மீது

தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் காயமடைந்த வர்த்தகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு