யாழ்.வடமராட்சி கிழக்கு - அம்பன் பகுதியில் வீடு முற்றுகை..! கைத்துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு - அம்பன் பகுதியில் வீடு முற்றுகை..! கைத்துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது..

யாழ்.வடமராட்சி கிழக்கு - அம்பன் பகுதியில் கைத்துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

30 வயதுடைய ஒருவரே இன்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர உதவிப் பிரிவுக்கு தொலைபேசி மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில், 

குறித்த நபரின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டபோது கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் வீட்டிலிருந்த நபர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு