தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் நினைவு கூரப்பட்ட அன்னைபூபதி

ஆசிரியர் - Admin
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் நினைவு கூரப்பட்ட அன்னைபூபதி

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (19) பிற்பகல் யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நினைவுகூரப்பட்டது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி -வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அன்னை பூபதியின் பேர்த்தியான திருமதி- கோபிதாஸ் குணேஸ்வரி பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு அன்னை பூபதியின் பேர்த்தியான திருமதி- கோபிதாஸ் குணஸ்வரி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் மலர்மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன. யாழ்.பல்கலைக்கழக மாணவியின் கவிதை நிகழ்வும் இடம்பெற்றது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு