யாழ்.தெல்லிப்பழையில் பொலிஸார் அதிரடி..! வாள்களுடன் 3 ரவுடிகள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் பொலிஸார் அதிரடி..! வாள்களுடன் 3 ரவுடிகள் கைது..

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் வாள்களுடன் சென்று கொண்டிருந்த 3 ரவுடிகளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வாள்களையும் மீட்டிருக்கின்றனர். 

வாள்வெட்டு தாக்குதல் நடத்தும் நோக்கில் சென்று கொண்டிருந்த 3 ரவுடிகளையே வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம், நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. மல்லாகத்தில் அவர்களைச் சோதனையிட்டபோதே, மோட்டார் சைக்கிளில் வாளை மறைத்தவாறு 

பயணித்தமை தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். 18, 20, 21 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர்கள், நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று தெல்லிப்பழைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு