வடமாகாணத்தில் கர்ப்பவதி பெண்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக அங்கர் விநியோகம்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் கர்ப்பவதி பெண்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக அங்கர் விநியோகம்..!

வடமாகாணத்திலுள்ள சகல கர்ப்பவதி பெண்களுக்கும் தலா 2 அங்கர் பெட்டிகள் (400கிராம்) பழைய விலையில் 380 ரூபாய்க்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக வழங்கப்படும். என மாகாண கூட்டுறவு ஆணையாளர் மு.நந்தகோபன் கூறியுள்ளார். 

கர்ப்பவதிகள் தங்கள் பகுதி கூட்டுறவு சங்க கிளைகள் ஊடாக தமக்கான அங்கர் மா பெட்டிகளை கொள்வனவு செய்ய முடியும். எனினும் தென்மராட்சி பிரதேச கர்ப்பவதிகள் கொடிகாமம் ப.நோ.கூ சங்கத்திலேயே பெற முடியும். 

மேலும் அங்கர் பால்மா நாளை செவ்வாய் கிழமை வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அதன் பின்னர் கர்ப்பவதிகளுக்கு அங்கர் பால்மா வழங்கப்படும் என கூட்டுறவு ஆணையாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு