தறிகெட்டு ஓட்டம்..! இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

ஆசிரியர் - Editor I
தறிகெட்டு ஓட்டம்..! இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

கிளிநொச்சி - ஏ-9 வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் இன்று நண்பகல் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரடிப்போக்கு விவசாய விதை உற்பத்திப் பண்ணைக்கு முன்பாக ஏ-9 வீதியால் டிப்பர் வாகனம் ஒன்று  சென்றுகொண்டிருந்தபோது, 

 முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்ற இ.போ.ச பேருந்து ஒன்று திடீரென தரித்து நின்றமையால் அதன் பின்னே சென்ற டிப்பர் சடுதியாக நிறுத்தப்பட்டதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகிறது. 

இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு