விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல!! -தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தகவல்-

ஆசிரியர் - Editor II
விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல!! -தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தகவல்-

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். அவருடைய மரணம் திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மரணிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு ஒன்றை கடந்த ஓகஸ்ட் மாதம் அளித்திருந்தார். இந்த முறைப்பாட்டை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

இந்த விசாரணை முடிவில் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. அவர் உயர் இரத்த அழுத்தத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் கொடுத்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு