நேரத்திற்கு ஒரு விலையா? என அரசாங்கத்தை திட்டியபடி விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல்! வர்த்தகருக்கு நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
நேரத்திற்கு ஒரு விலையா? என அரசாங்கத்தை திட்டியபடி விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல்! வர்த்தகருக்கு நடந்த சம்பவம்..

நாளுக்கு ஒரு விலையை சொல்கிறார்கள் என அரசாங்கத்தை திட்டியபடி விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வர்த்தகர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கிராமப்புற கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாடு அடிப்படையில் கடந்த 13ம் திகதி முள்ளியவளை - முறிப்பு பகுதியில்

விலை கட்டுப்பாட்டு பிரிவு சோதனை நடத்திய நிலையில் கோபமடைந்த வர்த்தகர் அரச ஊழியர்களான விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை தாக்கியுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் அரசையும் திட்டியுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வர்த்தகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட நிலையில் 21ம் திகதிவரை விளக்கமறியில் வைக்கப்பட்டார். 

இந்த வழக்கு விசாரணை 21ம் திகதியான நேற்று விசாரிக்கப்பட்டபோது அரச உத்தியோகஸ்த்தரை தாக்கியமைக்காக 2 லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு