கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் எதற்கு?

ஆசிரியர் - Admin
கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் எதற்கு?

எரிவாயு, சீமெந்து, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப வானளாவிய உயரத்துக்கு அதிகரித்துச் செல்லும் போது அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனச் சொல்லுவதாயின் அரசாங்கம் எதற்கு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அரசாங்கத்துக்கு நாட்டை கட்டியெழுப்புவதை விடுத்து குறைந்தபட்சம் பொருளாதாரத்தைக்கூட முகாமைப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நன்றாக நிரூபித்துள்ளது என்றார்.

“இந்த நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளில் இருந்து மக்களை மீட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திறன் அரசாங்கத்திடம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விலகி இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களுக்கான அனைத்து வருமான வழிகளும் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டில் போசாக்குக் குறைபாடு அதிகரித்து வருவதாகவும் மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு