பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி!! ரெட் கார்டா? கொரோனாவா?

விஜய் ரீவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நமீதா, கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 5 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் பங்கு கொண்டார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார். அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
அவர் பிக்பாஸ் வீட்டில் தகராறு செய்ததால் சிவப்பு அட்டை (ரெட் காட்) கொடுத்து வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவி வந்தது. அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில், நமீதா வெளியேறியதற்கான உண்மை காரணம் வெளியாகி உள்ளது. அவர் மருத்துவ காரணங்களுக்காக தாமாக வெளியேறியதாக அவரின் நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.