யாழ். மிருசுவில் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..!

ஆசிரியர் - Editor I
யாழ். மிருசுவில் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..!

யாழ்.மிருசுவில் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மிருசுவில் பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  கொடிகாமப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு