இலங்கை மீனவர்கள் வாழ்வை அழிக்கும் இந்திய மீனவர்களை கண்டித்து போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
இலங்கை மீனவர்கள் வாழ்வை அழிக்கும் இந்திய மீனவர்களை கண்டித்து போராட்டம்..!

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக இன்றைய தினம் காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

கடந்த 5ம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு 

படகில் இருந்த குருநகர் மீனவர்களை தாக்க இந்திய மீனவர்கள் முயன்ற நிலையில், குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டே மீனவர் சங்கங்களின்

ஏற்பாட்டில் இன்றைய போராட்டம் இடம்பெற்றது. எமது கடல் வளங்களை அழிக்காதே, இலங்கை அரசே இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து, 

எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வெளிநாட்டு மீனவர்களை அனுமதிக்காதே, இலங்கை அரசே உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்து, 

கடல் வளத்தை சுரண்டி எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே போன்ற பல்வேறு கோசங்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் எழுப்பப்பட்டன.

போராட்டத்திற்கு பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட பணிப்பாளரிடம்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு