பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தமைக்கு ஒரே காரணம் இது தான்!

ஆசிரியர் - Admin
பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தமைக்கு ஒரே காரணம் இது தான்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேசும்போது,

 இம்மாதம் முதலாம் ஆண்டு சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.  அன்றைய தினமே இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் 25 ஆவது அகவை நாளாகும்.

 இனவாத அரசாங்கத்தின் கோரமுகத்தை உலகுக்கு காட்டிய பெரும் யுத்தக் குற்றச்சாட்டாக இசைப்பிரியா, பாலச்சந்திரனின் படுகொலைகள் இடம்பெற்ற பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது.  இந்த படுகொலை உலக தமிழர்களின் மனங்களில் ரணமாக இன்னும் தமிழ் சிறுவர்களுக்கு உள்ள உயிர்வாழும் உரிமைக்கூட இலங்கையில் பறிக்கப்படுகிறது.  இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை முதல் 2008 டிசம்பர் 20 ஆம் தேதி வரையில் 1929 இக்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ள கிழக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியிடப்பட்டது.

 இந்த உரையால் விசமனடைந்த அரச தரப்பு எம்.பி.க்கள் அவரது உரைக்குக் கடுமையான எதிர்ப்புகளை வெளியிடுகிறது  கடும் தர்க்கம் புரிந்தனர்.

 இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், சர்வதேசத்தை இலக்கு வைத்து சிறிதரன் உரையாடுகிறார்.

 சிறிதரன் கூறுவது எல்லாம் கடந்த காலங்களில் இடம்பெற்றவை.  அப்படி என்றால் சிறிமா போதி, தலதா மாளிகை உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வைத்தபோது அதில் சிறுவர்கள் பலியாகவில்லையா?  நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் நடைபெறவில்லை.  பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் நடைபெற்றது என வாதிட்டனர்.

 மேலும் சிறிதரன் எம்.பியின் இனவாத கருத்துக்களை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.  எனினும் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் சிறிதரன் எம்.பி தனது உரையை தொடர்ந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு