யாழ்.ஆணைக்கோட்டை வீதியில் பாலம் இடிந்து விழுந்தது! அவ் வீதி ஊடாக பயணிப்போர் அவதானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆணைக்கோட்டை வீதியில் பாலம் இடிந்து விழுந்தது! அவ் வீதி ஊடாக பயணிப்போர் அவதானம்..

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில் ஆனைக்கோட்டை வீதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. 

அதிகளவானோர் இந்த வீதியை பயன்படுத்தும் நிலையில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து உடைந்த பகுதியை அடையாளப்படுத்தியுள்ளனர். 

மேலும் கனரக வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றது. குறித்த வீதி ஊடாக பயணிப்போர் அவதானத்துடன் பயணிப்பது சிறந்தது. 

மேலும் குறித்த பாலம் உடைந்து விழுந்துள்ளமை தொடர்பாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கவனத்திற்கும் பொதுமக்கள் கொண்டு சென்றிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு