யாழ்.தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் கோர விபத்து..! ஒருவர் பலி, மேலும் ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் கோர விபத்து..! ஒருவர் பலி, மேலும் ஒருவர் படுகாயம்..

யாழ்.தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

பட்டா வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். 

பட்டா வாகனத்தை மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கிளிநொச்சி - அம்பாள்குளத்தை சேர்ந்த  அ.சுரேஸ்குமார்(வயது40) என்பவரே உயிரிழந்துள்ளார். 

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு