யாழ்.நாவலர் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவலர் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்.நாவலர் வீதியில் உள்ள ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் யாழ்.பிராந்திய அலுவலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 

இதன்போது அண்மையில் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கெதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இன்று சிறுவர்கள் தினம் இல்லை கறுப்பு தினம். 

அதிகமான சிறுவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையிலே இன்றைய சிறுவர் தினத்தினை நாங்கள் கறுப்பு நாளாகவே அனுஷ்டிக்கிறோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இணைப்பாளர் சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார். 

போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வெளியே புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு