பதிவுத் திருமணத்திற்கு மட்டும் அனுமதி! புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது..

ஆசிரியர் - Editor I
பதிவுத் திருமணத்திற்கு மட்டும் அனுமதி! புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது..

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின் பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்த சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது.

அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அனுமதி வழங்கப்படமாட்டாது.

உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள், விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை (01) முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியும்.

பொது போக்குவரத்து சேவைகளின் போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

பஸ்களில் யன்னல்களை திறந்து செல்லவேண்டியது அவசியம்.

தனிமனித இடைவெளி பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம்.

 உள்ளிட்ட பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு