யாழ்.பருத்தித்துறையில் செபம் சொல்லிக் கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்! கொரோனா தொற்றும் உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் செபம் சொல்லிக் கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்! கொரோனா தொற்றும் உறுதி..

செபம் சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பருத்தித்துறை - அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த செபபாக்கியம் கிறேஸ் மணி (வயது- 51) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். 

உயிரிழந்த பெண் கோவளம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஜெபித்துக் கொண்டிருந்தபோது மயங்கி வீழ்ந்தார். 

அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 

அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் நேற்று பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது அவருக்கு தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. 

பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு