யாழ்.கோண்டாவிலில் மதுபோதையில் அட்டகாசம் செய்த நபர் பொலிஸார் மீதும் வாள்வெட்டு நடத்த முயற்சி! எச்சரிக்கை வேட்டு வைத்து ரவுடியை கைது செய்த பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் மதுபோதையில் அட்டகாசம் செய்த நபர் பொலிஸார் மீதும் வாள்வெட்டு நடத்த முயற்சி! எச்சரிக்கை வேட்டு வைத்து ரவுடியை கைது செய்த பொலிஸார்..

யாழ்.கோண்டாவில் பகுதியில் மதுபோதையில் தாய் மீது தாக்குதல் நடத்திய நபர் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. கோண்டாவில் - செபஸ்த்தியன் தேவாலயத்தடியில் மதுபோதையில் தாய் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பாக அயலில் உள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கின்றனர். 

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நிலையில் வாள் ஒன்றை எடுத்துக் கொண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். இதனையடுத்து வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்த பொலிஸார் 

சந்தேகநபரை கைது செய்திருப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு