தனது நாக்கை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த யாழ்ப்பாண இளைஞன்..! பொலிஸ் ஆராய்கிறதாம், கொழும்பு ஊடகங்கள் தகவல்..

ஆசிரியர் - Editor I
தனது நாக்கை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த யாழ்ப்பாண இளைஞன்..! பொலிஸ் ஆராய்கிறதாம், கொழும்பு ஊடகங்கள் தகவல்..

தனது நாக்கை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த இளைஞர் ஒருவருடைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகின்றது. 

யாழ்.நகரில் பச்சை குத்தும் கடையொன்றை நடத்திவரும் இளைஞன் ஒருவரே இவ்வாறு நாக்கை இரண்டாக பிளந்து சந்திர சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 

காலிக்கு சென்று இந்த சத்திர சிகிச்சையினை இவர் மேற்கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

நாகரிகம் என்ற பெயரில் இந்த வகையான செயற்பாடுகள் மிக தவறானவை என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றது. 

மேலும் குறிப்பிட்ட இளைஞனின் இத்தகைய செய்பாடு தொடர்பாக பொலிஸார் ஆராய்ந்து வருவதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு