யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு - மகாத்மா கிராமத்தில் ரவுடிகள் அட்டகாசம்! இரு வீடுகள் தீக்கிரை, பொருட்கள் சேதம், வெட்டுகுமார் என்ற ரவுடி கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு - மகாத்மா கிராமத்தில் ரவுடிகள் அட்டகாசம்! இரு வீடுகள் தீக்கிரை, பொருட்கள் சேதம், வெட்டுகுமார் என்ற ரவுடி கைது..

யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாள்வெட்டு குழு ரவுடியான வெட்டுகுமார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளனர். 

கடந்த 2 ம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தை சேர்ந்த வாள்வெட்டு குழு ரவுடியான வெட்டுக்குமார் வீடுகளுக்குள் புகுந்து அடித்து நொருக்கிய நிலையில் 6 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில்  மீண்டும் நேற்று முன்தினம் இரு வீடுகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ரவுடி கும்பல் பல வீடுகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டும் அங்கிருந்த சொத்துக்கள் உடமைகள் அனைத்து தீக்கிரையாக்கியுள்ளனர்.

இந்நிலையில் ரவுடி வெட்டிக்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவனது சகோதரன் ஜெயா என்ற ரவுடி உட்பட சிலர் தலைமறைவாகியுள்ளதாக தொியவருகின்றது. 

இந்நிலையில் தினமும் அச்சத்துடன் வாழ்வதாக அல்வாய் வடக்கு மகாத்மா கிராம மக்கள் கூறியிருக்கின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு