கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அரச மரத்துடன் மோதி விபத்து! 3 பேர் படுகாயம், யாழ்.அராலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அரச மரத்துடன் மோதி விபத்து! 3 பேர் படுகாயம், யாழ்.அராலியில் சம்பவம்..

யாழ்.அராலியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அரச மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது. அராலி மத்தியை சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் பேருந்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 

வீதி ஓரத்தில் நின்ற அரச மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவதில் பேருந்தில் இருந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் 1990 நோயாளர் காவுவண்டி ஊடாக 

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இருவர் சிறு காயங்களுக்குள்ளானதாக கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு