எல்லைமீறி கூடியிருந்த மதுப்பிரியர்கள்..! இரு மதுபானசாலைகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்..

ஆசிரியர் - Editor I
எல்லைமீறி கூடியிருந்த மதுப்பிரியர்கள்..! இரு மதுபானசாலைகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்..

வவுனியாவில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அதிகளவானர்கள் கூடியிருக்க மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இரு மதுபானசாலைகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவிலவானோரை ஒன்று கூடி நின்ற நிலையில், வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர்.

இதனையடுத்து வவுனியா குழுமாட்டு சந்தி பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் மற்றும் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் என்பனவே இவ்வாறு தனிமைப்படுததப்பட்டன.

குறித்த இரு மதுபான விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு