நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேன்திரன் உள்ளிட்ட 3 பேரும் பிணையில் விடுதலை! 27ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேன்திரன் உள்ளிட்ட 3 பேரும் பிணையில் விடுதலை! 27ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல்..

யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள தியாகி திலீபனின் நினைவு துாபி முன்பாக அஞ்சலி செலுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேன்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்.மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் 

இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்றபோது பொலிஸார் தடை விதித்தனர். நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்டவேளை 

அவரையும் அவருடன் சென்றவர்களையும் பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு