நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்! இல்லையேல் வடகிழக்கில் மக்கள் போராட்டம் வெடிக்கும், சிவாஜி எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்! இல்லையேல் வடகிழக்கில் மக்கள் போராட்டம் வெடிக்கும், சிவாஜி எச்சரிக்கை..

யாழ்.நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் வடகிழக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் விளக்கேற்ற முற்பட்டபோது யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மக்களின் உரிமைக்காக அறவழியில் போராட்டம் நடத்தி தன் உயிரை மாய்த்த தியாக தீபம் திலீபனின் நினைவை தமிழ் மக்களிடமிருந்து பிரித்துவிட முடியாது.

தமிழ் மக்களுக்காக ஜனநாயக வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை பொலிஸார் தடுத்தமை இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான செயற்பாடாகும்.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் அவர்களுடன் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக அரசாங்கம் தலையீடு செய்து விடுவிக்க வேண்டும்.

அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் வடக்கு-கிழக்கு இணைந்து பாரிய மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு